இந்தியா வரும் 2020ல் வல்லரசு நாடாக வேண்டும் என்பது அப்துல் கலாமின் கனவு. அது நிறைவேற அவர் கூறும் யோசனைகள் தான் 'இந்தியா 2020 வல்லரசு'க்கான பாதை. கலாமின் கனவை நினைவாக்குவதே அவருக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி. இது கலாமின் இந்தியா 2020 வல்லரசுக்கான வழிகள்:
*2020ம் ஆண்டுக்குள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களின் எண்ணிக்கை பூஜ்யமாக வேண்டும்.
* எழுதப் படிக்க தெரிந்தோர் எண்ணிக்கை 100 சதவீதமாக வேண்டும்.
* ஒவ்வொரு இந்தியனும் ஒருபல்கலைக் கழக டிகிரி படிப்பது சாத்தியமாக வேண்டும்.
* 'இ - கவர்னன்ஸ்' திட்டத்தை அரசு ஒவ்வொரு குடிமகனுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்துக்கும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்.
* ஒவ்வொரு கிராமத்துக்கும் குடிநீர்; ஒவ்வொரு வருக்கும் கழிப்பறை மற்றும் சுகாதாரம் கிடைக்க செய்ய வேண்டும்.
* சிறந்த செயல்திட்டங்கள் மூலம் தொழிற்சாலை களை நிறுவி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
* இந்தியாவில்வசிக்கும் அனைத்து ஏழைகளுக்கும் மிகக்குறைந்த செலவில் மருத்துவ வசதி கிடைக்க செய்ய வேண்டும்.
* இதுவரை அரசு திட்டங்கள் சென்றுஅடையாத ஏழைகளுக்கு திட்டத்தின் பலன் சென்றடைய
வழிவகை செய்ய வேண்டும்.
* விவசாயிகளுக்கு 'நபார்டு' மற்றும் வங்கிகள்
மூலம் கடன் வழங்கி அவர்களை கடன் சுமை யிலிருந்து மீட்க வேண்டும்.
Advertisement
* தொழிற்சாலைகள், பல்கலைக் ஆராய்ச்சியாளர், அறிஞர் ஆகியோர் விவசாயிகளுடன் சேர்ந்து உணவு உற்பத்தி; தானியம் பதப்படுத்துதல்; விவசாய உற்பத்தி ஆகியவற்றில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.
* இன்சூரன்ஸ் கம்பனிகள் சிறுகடன்பயிர் காப்பீடு ஆகியவற்றை விவசாயிகளுக்கு செய்து தர வேண்டும்.
* கார்ப்பரேட் நிறுவனங்கள் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வதை தம் சமுதாய கடமையாக நினைக்க வேண்டும்.
* தொலைத் தொடர்பு யுகம் என்று நாம் பெருமை கொள்வது உண்மை எனில் இதுவரை பயன் படுத்தாத மக்களை நாம் அணுக செய்ய வேண்டும்.
இதுதான் கலாம் சொல்லும் 'இந்தியா - 2020!'
No comments:
Post a Comment